பதிவு செய்த நாள்
24 ஜூன்2014
00:25
மும்பை :சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.,) திட்டத்தை அமல்படுத்தினால், நாட்டின் நிதிப் பற்றாக்குறை குறையும் என, தர நிர்ணய நிறுவனமான, கிரிசில் தெரிவித்துள்ளது.இதன் ஆய்வறிக்கை விவரம் வருமாறு:கடந்த மூன்று ஆண்டுகளாக, மத்திய அரசின் வருவாய்க்கும், செலவினத்திற்கும் இடையிலான நிதிப் பற்றாக்குறை, 4.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இது, 2012 – 13ம் நிதியாண்டில், 4.9 சதவீதமாக இருந்தது. நிதிப் பற்றாக்குறையை குறைக்க, அரசு, வரி வருவாயை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக, பல்வேறு வரிகளை நீக்கி, ஜி.எஸ்.டி., திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால், நிறுவனங்களின் வர்த்தக செலவு குறைந்து, லாபம் அதிகரிக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும். முதலீடுகள் குவியும். இதன் மூலம், மத்திய அரசுக்கு வரிகள் வாயிலான வருவாயும் அதிகரிக்கும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|