பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
00:21
மும்பை சாதகமற்ற சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.இன்று வெளியாகவுள்ள பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பால், முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.50 சதவீதத்திற்கும் மேல் சரிவை கண்டன.நேற்றைய வியாபாரத்தில், மோட்டார் வாகனம், மின்சாரம், ரியல் எஸ்டேட், பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை மிகவும் குறைந்து காணப்பட்டது.
அதேசமயம், எண்ணெய், எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர் பொருள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 137.30 வீழ்ச்சி கண்டு, 25,444.81 புள்ளிகளில் நிலைபெற்றது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஓ.என்.ஜி.சி., ஹிண்டால்கோ உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 38.20 புள்ளிகள் குறைந்து, 7,585 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|