பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
00:30
புதுடில்லி :நடப்பாண்டில், இந்தியாவின் காபி உற்பத்தி, 13.22 சதவீதம் அதிகரித்து, 3,44,750 டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்தாண்டில், இதன் உற்பத்தி, 2.25 சதவீதம் சரிவை கண்டு, 3,04,500 டன்னாக இருந்தது என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.
மேற்கண்ட மொத்த உற்பத்தியில், அராபிகா வகை காபி உற்பத்தி, 3.23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,05,500 டன்னாக உயரும் என, கணக்கிடப்பட்டுள்ளது. அதேசமயம், ரோபஸ்டா வகை காபி உற்பத்தி, 18.26 சதவீதம் அதிகரித்து, 2,39,250 டன்னாக உயரும் என, தெரிவிக்கப்பட்டுள் ளது.குறிப்பாக, கர்நாடகாவில் இதன் உற்பத்தி, 17.62 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,11,100 டன்னிலிருந்து, 2,48,300 டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய பகுதிகளான ஆந்திரா மற்றும் ஒடிசாவிலும், காபி உற்பத்தி, 22 சதவீதம் உயர்ந்து, 9,480 டன்னாக அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.கேரளாவிலும், இதன் உற்பத்தி, நடப்பாண்டில், 3.30 சதவீதம் வளர்ச்சி கண்டு, 66,675 டன்னிலிருந்து, 68,875 டன்னாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம், தமிழகத்தில், இதன் உற்பத்தி, 5 சதவீதம் சரிவடைந்து, 18,775 டன்னிலிருந்து, 17,875 டன்னாக குறையும் என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி குறித்த மதிப்பீட்டை, காபி வாரியம் ஆண்டுக்கு இரு முறை வெளியிடுகிறது. முதல் மதிப்பீட்டை, காபி மலர் அரும்பியதற்கு பிறகும் (மே–ஜூன்), இரண்டாம் மதிப்பீட்டை, பருவ மழைக்கு பிறகும் (நவ.,–டிச.,) வெளியிடுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|