பதிவு செய்த நாள்
10 ஜூலை2014
17:49
மும்பை : பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பில் இந்திய பங்குசந்தைகள் இன்று அதிக ஏற்றமும், இறக்கமுமாக இருந்தது. மோடி அரசின் முதல் பட்ஜெட் பார்லிமென்ட்டில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனால் பங்குசந்தைகள் காலை முதலே விறுவிறுப்பாக இருந்தது. ஒருக்கட்டத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் இறுதியில் பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 72.06 புள்ளிகள் சரிந்து 25,372.75-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 17.25 புள்ளிகள் சரிந்து 7,567.75-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 25,920.46 புள்ளிகள் வரையிலும், நிப்டி 7,731.05 புள்ளிகள் வரையிலும் சென்றன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 17 நிறுவன பங்குகள் விலை சரிந்தும், 13 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ., ஆக்சிஸ், எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ்., போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|