தங்கம் விலை ரூ.24 குறைந்ததுதங்கம் விலை ரூ.24 குறைந்தது ... சரக்கு போக்­கு­வ­ரத்தில்ரயில்வே துறை வளர்ச்சி சரக்கு போக்­கு­வ­ரத்தில்ரயில்வே துறை வளர்ச்சி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகள் ஆட்டம் கண்டன! சென்செக்ஸ் 348 புள்ளிகள் வீழ்ச்சி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2014
17:18

மும்பை : பங்கு வர்த்தகத்தில், வாரத்தின் கடைசிநாளான இன்று, இந்திய பங்குசந்தைகள் ஆட்டம் கண்டன, சென்செக்ஸ் 348 புள்ளிகள் சரிந்தது, நிப்டி 7500 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் பங்குசந்தைகளுக்கு மோசமான வாரமாக அமைந்தது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போது பங்குசந்தைகள் ஏற்றத்துடன் தான் துவங்கின. குறிப்பாக இன்போசிஸ் நிறுவனத்தின் முதல்காலாண்டு நிதிநிலை அறிக்கை உயர்ந்ததால் அந்நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன. இவை தவிர்த்து மற்ற ஐ.டி., நிறுவன பங்குகளும் உயர்ந்தன. இதனால் பங்குசந்தைகள் ஏற்றத்துடன் இருந்தன. ஆனால் மோடி அரசின் முதல் பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாததாலும், முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை‌ செய்ததாலும் பங்குசந்தைகள் சரிந்தன. இதனால் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு 348.40 புள்ளிகள் சரிந்து 25,024.35-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 108.15 புள்ளிகள் சரிந்து 7,500 புள்ளிகளுக்கு கீழ் சென்று 7,459.60-ஆக முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் அநேக பங்குகள் விலை சரிவில் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் எஸ்.பி.ஐ., ஹிண்டால்கோ, ஆக்சிஸ், ஐசிஐசிஐ., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஓஎன்ஜிசி., கெயில் இந்தியா, எல்அண்ட்டி., என்டிபிசி., உள்ளிட்ட பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன.
இந்தவாரத்தில், கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1,075.73 புள்ளிகள் சரிந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் 937.71 புள்ளிகள் சரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)