பதிவு செய்த நாள்
12 ஜூலை2014
00:16
மும்பை:வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்று, பங்கு வியாபாரம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.இன்போசிஸ் நிறுவனத் தின் முதல் காலாண்டு முடிவு கள், எதிர்பார்த்ததை விட நன்கு இருந்தையடுத்து, காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக காணப்பட்டது.
இந்நிலையில், போர்ச்சுகல் நாட்டின் வங்கி துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி உள்ளிட்ட சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், மதியத்திற்கு பிறகு, வர்த்தகம் சரிவை கண்டது. ஒரு கட்டத்தில் ‘சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது. இந்நிலையில், பொது வரி தவிர்ப்பு தடுப்பு சட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகமாகும் என, தகவல் கசிந்ததால், பங்கு வர்த்தகம் மீண்டும் சூடு பிடித்தது. நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், பொறியியல் மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், மருந்து, தகவல்தொழில்நுட்ப துறை பங்குகளுக்கு தேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண், ‘சென் செக்ஸ்’, வர்த்தகம் முடியும் போது, 348.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,024.35 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தை யின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 25,548.33 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 24,978.33 புள்ளிகள் வரையிலும் சென்றது.
‘சென்செக்ஸ் கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பெல், ஹிண்டால்கோ உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன்பார்மா, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 108.15 புள்ளிகள் சரிவடைந்து, 7,459.60 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|