பதிவு செய்த நாள்
12 ஜூலை2014
00:27
புதுடில்லி:சென்ற ஏப்., – ஜூன் வரையிலான காலாண்டில், புண்ணாக்கு ஏற்றுமதி, 31 சதவீதம் சரிவடைந்து, 5.92 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 8.56 லட்சம் டன்னாக இருந்தது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதி குறைந்ததால், ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.
போட்டி:விலை உயர்வால் சோயா வரத்து குறைந்து, சோயா புண்ணாக்கு உற்பத்தி செலவை அதிகரிக்கச்செய்துள்ளது. இந்த விலையேற்றம் காரணமாக, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, சர்வதேச நாடுகளின் போட்டியை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஈரான், தென்கொரியா மற்றும் இதர நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி வீழ்ச்சி கண்டுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில், ஈரான் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 61 சதவீதம் சரிவடைந்து, 1.02 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதே காலத்தில், தென்கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 3.12 சதவீதம் சரிவடைந்து, 2.95 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. தாய்லாந்து, வியட்னாம், தைவான், இந்தோனேஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 50 ஆயிரம் டன்னிற்கும் குறைவாக உள்ளது.சென்ற ஜூன் மாதம், மிகக் குறைந்த அளவாக, சோயா புண்ணாக்கு ஏற்றுமதி, 2,637 டன்னாக சரிவடைந்து உள்ளது.
கடுகு புண்ணாக்கு:மதிப்பீட்டு காலாண்டில், சோயா உற்பத்தி, 4.09 லட்சம் டன்னில் இருந்து, 1 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.சோயா புண்ணாக்கை தொடர்ந்து, ஆமணக்கு புண்ணாக்கு ஏற்றுமதியும், 1.61 லட்சம் டன்னாகவும், தவிட்டுபுண்ணாக்கு ஏற்றுமதி, 10,111 டன்னாகவும் குறைந்துள்ளன.அதே சமயம், இதே காலத்தில், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி, 2.26 லட்சம் டன்னில் இருந்து, 3.20 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|