பதிவு செய்த நாள்
13 ஜூலை2014
00:19
புதுடில்லி:பொதுத் துறை வங்கிகளை இணைப்பதில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக, நிதி சேவைகள் துறை செயலர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:
பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு குறித்த சில நடவடிக்கைகள், நடப்பாண்டு துவக்கப்படும். அடுத்த ஆண்டு, மேலும் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் மூலம், வங்கித் துறை மேலும் வலுவடையும். இணைப்பு தொடர்பாக, வங்கிகள் சில கருத்துக்களை தெரிவித்துள்ளன. அவற்றை அரசு பரிசீலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பொதுத் துறை வங்கிகளில் முதலிடத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதன் துணை வங்கியான பேங்க் ஆப் சவுராஷ்டிராவை, கடந்த, 2008ம் ஆண்டு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, 2010ம் ஆண்டு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்துார் இணைக்கப்பட்டது. தற்போது, மேலும் ஐந்து துணை வங்கிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, அவற்றையும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|