பதிவு செய்த நாள்
13 ஜூலை2014
00:32
விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் நாட்டு உளுந்து மூடைக்கு(100கிலோ) ரூ.1000 உயர்ந்துள்ளது. இதே போன்று முதல் ரக பாசிப்பருப்பும் மூடைக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது.எண்ணெய் மார்க்கெட்டில், கடந்தவாரத்தைப்போல் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) 1,300, நல்லெண்ணெய் 3,100 , சன்பிளவர் எண்ணெய் 1,200 ரூபாய்க்கு விற்பனையானது.
பாமாயில் டின்னுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 1,010 ரூபாயாக உள்ளது. 80 கிலோ நிலக்கடலை பருப்பு 4,300, 100 கிலோ கடலை புண்ணாக்கு 4,000 ரூபாயாக உள்ளது.100 கிலோ சர்க்கரை மூடை 3,305 ரூபாயாக உள்ளது.
இது, கடந்தவாரத்தை விட மூடைக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. 90 கிலோ மைதா, 90 கிலோ ரவை தலா 3,040 ரூபாய் , 55 கிலோ பொரிகடலை, 2,410 ரூபாயாக உள்ளது.100 கிலோ பர்மா உளுந்தில் பொடிவகை 5,400, பருவட்டு 6,300 , நாட்டு உளுந்து, மூடைக்கு 1,000 ரூபாய் உயர்ந்தது, 7,800 ரூபாய்க்கு விற்பனையானது.
100 கிலோ உளுத்தம் பருப்பில், பர்மா பொடிவகை 7,200, பருவட்டு வகை 7,800, நாடு வகை 9,200 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ துவரம் பருப்பில், நாடுவகை 6,900, இரண்டாம் வகை 5,900, பொடி வகை 5,750 ரூபாய்க்கு விற்பனையானது. 100 கிலோ முதல் ரக பாசிப்பருப்பு 9,100, இரண்டாம் ரகம் 8,900 ரூபாயாக உள்ளது.
இது மூடைக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. 100 கிலோ ஆந்திரா குண்டூர்வத்தல் 7,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 100 கிலோ முதல்ரக நாட்டுவத்தல் 6,000 முதல் 6,100 ரூபாய் வரையும், 2வது ரகம் 5,200 முதல் 5,500 ரூபாய் வரையும் விற்பனையானது. நாட்டுவரத்தல் வரத்து குறைவாகவே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|