பதிவு செய்த நாள்
22 ஜூலை2014
02:18
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில், நாட்டின் வரி வசூல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டும் என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.வருமான வரி துறை ஆணையர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அருண் ஜெட்லி, இதுகுறித்து மேலும் கூறியதாவது:கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், பட்ஜெட் மதிப்பீட்டின்படி, நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலம், 12.35 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆனால், வரி வசூல், இலக்கை விட, 77 ஆயிரம் கோடி ரூபாய் குறைவாக, அதாவது, 11.58 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டது.
இந்நிலையில், நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், வரிகள் வாயிலாக, 13.64 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள பொருளாதார சுணக்க நிலை காரணமாக, மறைமுக வரி வசூல் இலக்கை எட்டுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, தயாரிப்பு துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுஉள்ளன.இதையடுத்து, தயாரிப்பு துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த தொழில் துறையும், கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில், சிறப்பாக வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதன் பயனாக, நடப்பு நிதியாண்டில், நாட்டின் வரி வசூல் இலக்கை தாண்டி சாதனை படைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|