பதிவு செய்த நாள்
22 ஜூலை2014
23:47
புதுடில்லி:உர நிறுவனங்களுக்கான, உள்நாட்டு எரிவாயு ஒதுக்கீட்டை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என, உரத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, உரத்துறை செயலர் இந்திரஜித் பால், பெட்ரோலிய அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
உரத் துறை நிறுவனங்களுக்கான எரிவாயு ஒதுக்கீடு, தற்போது, நாள் ஒன்றுக்கு, 3.15 கோடி கனமீட்டராக உள்ளது. இது, போதுமானதாக இல்லை.இதையடுத்து, எரிபொருள் தேவையை ஈடு செய்யும் வகையில், உர நிறுவனங்கள், திரவ எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது. உள்நாட்டுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி செய்யப்படும் திரவ எரிவாயுவின் விலை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
எனவே, உள்நாட்டு எரிவாயு ஒதுக்கீட்டை நாள் ஒன்றுக்கு, தற்போதைய, 3.15 கோடி கனமீட்டரிலிருந்து, 4.60 கோடி கனமீட்டராக அதிகரிக்கும் நிலையில், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|