பதிவு செய்த நாள்
24 ஜூலை2014
00:25
புதுடில்லி: பிரேசில், கொலம்பியா மற்றும் வெனிசுலா உள்ளிட்ட புதிய நாடுகளின், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது என, மத்திய எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஈரான்:இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதி, 18.92 கோடி டன்னாக இருந்தது.இதில், ஈரான், சவூதி அரேபியா உள்ளிட்ட, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மட்டும், 11.58 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில், வளை குடா நாடுகளின் பங்களிப்பு, 61 சதவீதமாக உள்ளது. இந்நிலையை மாற்றிடும் வகையில், மத்திய அரசு, இதர புதிய நாடுகளின் சந்தைகளிலிருந்தும், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஊக்குவித்து வருகிறது.
இதையடுத்து, இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்யும் நாடுகளின் பட்டியலில், லத்தீன் அமெரிக்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்நாடு, கடந்த நிதியாண்டில், 3.17 கோடி டன் கச்சா எண்ணெயை சப்ளை செய்துள்ளது. இதையடுத்து, ஆப்ரிக்கா (3.03 கோடி டன்) உள்ளது.உள்நாட்டில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு:இதன் ஒரு பகுதியாக, ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா நிறுவனங்களின் உற்பத்தி செயல்பாடுகள் மாதாந்திர அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் கச்சா எண்ணெய் பயன்பாடு, 22.37 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.அதேசமயம், கச்சா எண்ணெய் இறக்குமதி, 18.82 கோடி டன்னாகவும், உள்நாட்டில் இதன் உற்பத்தி, 3.55 கோடி டன்னாகவும் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|