பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
00:35
புதுடில்லி:சென்ற 2013–14ம் நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, அளவின் அடிப்படையில், 25 சதவீதம் சரிவடைந்து, 638 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.இது, மதிப்பின் அடிப்படையில், 1.60 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது என, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லோக்சபாவில் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 2012–13 மற்றும் 2011–12ம் நிதியாண்டுகளில், தங்கம் இறக்குமதி முறையே, 845 டன் (2.45 லட்சம் கோடி ரூபாய்) மற்றும் 919 டன் (2.28 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், தங்கம் இறக்குமதி, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில் முறையே, 221 டன் மற்றும் 54,792 கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்கும் வகையில், இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, தங்கம் கடத்தல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, சென்ற நிதியாண்டில், 2,441 ஆக அதிகரித்து உள்ளது.
இது, 2012–13 மற்றும் 2011–12ம் நிதியாண்டுகளில் முறையே, 869 மற்றும் 500 ஆக இருந்தது.தங்கம் இறக்குமதி அதிகரித்ததையடுத்து, கடந்த 2012–13ம் நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, 8,820 கோடி டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7 சதவீதம்) அதிகரித்தது.மத்திய அரசின் இறக்குமதி கட்டுப்பாடுகளால், சென்ற 2013–14ம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி, 3,240 கோடி டாலராக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1.7 சதவீதம்) சரிவடைந்து உள்ளது. தங்கம் இறக்குமதி மீதான சுங்க வரியை, குறைக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை.இவ்வாறு, நிர்மலா சீதாராமன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|