பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
00:37
சென்னை:கார்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்கான கட்டணத்தை, ஆக., 1ம் தேதி முதல், 15 சதவீதம் குறைக்க, காமராஜர் (எண்ணுார்) துறைமுகம் முடிவு செய்துள்ளது.தமிழக மின் வாரியத்திற்கு தேவையான நிலக்கரி கையாள துவங்கப்பட்ட, காமராஜர் துறைமுகம், பொது சரக்கு முனையமாக மாறி வருகிறது. பல்வேறு கார் நிறுவனங்களும், இந்த துறைமுகம் வழியாக, கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்த நிலையில், வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், சரக்கு கையாளும் கட்டணத்தை, ஆக., 1ம் தேதி முதல், 15 சதவீதம் குறைக்க, துறைமுக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னையில் நேற்று, கார் நிறுவன பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.பாஸ்கராச்சார் பேசுகையில், ‘‘துறைமுகத்தில், 10 ஆயிரம் கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. மேலும், 4,000 கார்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டு வருகிறது,” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|