பதிவு செய்த நாள்
28 ஜூலை2014
00:50
புதுடில்லி:சென்ற ஜூன் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,24,248 கோடி ரூபாயாக (3,700 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.
இது, கடந்த ஆறு ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.கடந்த மே மாதத்தில், இவ்வகையிலான முதலீடு, 2,11,740 கோடி ரூபாயாக இருந்தது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது. இதற்கு முன், கடந்த 2008ம் ஆண்டு மே மாதத்தில் தான், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணங்கள் மூலம் மேற்கொண்ட முதலீடு அதிகபட்சமாக, 2,34,933 கோடி ரூபாயை எட்டியிருந்தது.
வெளிநாடுகளில், அதிக சொத்து கொண்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனர்கள், அன்னிய நிதி நிறுவனங்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இதனால் அவர்களுக்கு, நேரம், செலவு ஆகியவை மிச்சமாகிறது. மத்தியில், நரேந்திர மோடி தலைமையில் நிலையான அரசு அமைந்ததையடுத்து, பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு, கடந்த சில மாதங்களாக, சிறப்பான அளவில் உயர்ந்து வருகிறது.
ஜூன் மாத நிலவரப்படி, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணங்கள் மூலம், கடன் பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 1.60 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் ஒட்டுமொத்த அளவில், இந்திய பங்குச் சந்தைகளில், 31 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக, ‘செபி’ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|