பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
03:43
மும்பை :முக்கிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்கு அதிகரிக்கும் என, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:உள்நாட்டில், 12 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இத்துறைமுகங்கள், தற்போது, ஆண்டுக்கு, 80 கோடி டன் சரக்கை கையாண்டு வருகின்றன.அடுத்த ஐந்து ஆண்டுகளில், துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனை, இருமடங்கு அதிகரித்து, 160 கோடி டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நாட்டின் முன்னேற்றத்திற்கு, துறைமுகம் மற்றும் சாலை ஆகியவற்றின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். எனவே, இந்த இரு கட்டமைப்பு வசதிகளின் திறனை மேம்படுத்தும் நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை, 2 சதவீதம் அதிகரிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|