பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
03:45
புதுடில்லி: நடப்பு 2014–15ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.2–5.7 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, பொருளாதார ஆராய்ச்சி தேசிய கவுன்சில் (என்.சி.ஏ.இ.ஆர்.,) தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் ஏற்பட்ட சுணக்க நிலை காரணமாக, கடந்த 2012–13 மற்றும் 2013–14ம் நிதியாண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதத்திற்கும் கீழ் சரிவடைந்தது.தற்போது, தயாரிப்பு துறை மந்தகதியில் இருந்து மீண்டு வருவதற்கான, அறிகுறிகள் தென்பட துவங்கியுள்ளன. இதனுடன், முதலீட்டு நடவடிக்கைகளும் சூடுபிடிக்கும் பட்சத்தில், நடப்பு நிதியாண்டில், பொருளாதார வளர்ச்சி, அதிகபட்சமாக, 5.7 சதவீதத்தை எட்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.எனினும், பருவழை பற்றாக்குறையால், நடப்பாண்டில், வேளாண் துறை வளர்ச்சி, கடந்தாண்டை காட்டிலும், குறைவாகவே இருக்கும் என, இக்கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|