பதிவு செய்த நாள்
01 ஆக2014
00:38
மும்பை :சாதகமற்ற சர்வதேச நிலவரங்களால், நேற்றைய பங்கு வியாபாரம் சுணக்கத்துடன் காணப்பட்டது.மேலும், ஜூலை மாத பங்கு ஒப்பந்தத்திற்கான இறுதி நாளான நேற்று, மின்சாரம், வங்கி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தனர்.அதேசமயம், ரியல் எஸ்டேட், மருந்து மற்றும் உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சரிவடைந்து காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 192.45 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 25,894.97 புள்ளிகளில் நிலைகொண்டது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 70.10 புள்ளிகள் குறைந்து, 7,721.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|