பதிவு செய்த நாள்
01 ஆக2014
10:29
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவில் இருக்கின்றன. இறக்குமதியாளர்களுக்கு அதிகளவு டாலரின் தேவை இருப்பதாலும், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதாலும், பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவாலும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று ரூபாயின் மதிப்பு 49 காசுகள் சரிந்து ரூ.60.55-ஆக இருந்த நிலையில் இன்று மேலும் சரிந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் சரிந்து ரூ.60.77-ஆக இருந்தது. தொடர்ந்து சரிவில் இருந்த ரூபாயின் மதிப்பு 63 காசுகள் சரிந்து மீண்டும் ரூ.61-ஐ தொட்டு ரூ.61.18-ஆக முடிந்தது. இன்றைய சரிவு கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|