பதிவு செய்த நாள்
01 ஆக2014
11:41
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.09 ரூபாய் நேற்று குறைந்தது. சென்னையில், இந்த விலை குறைப்பு, 1.15 ரூபாயாக இருக்கும். அதேநேரத்தில், டீசல் விலை லிட்டருக்கு, 50 காசுகள் உயர்ந்தது. சென்னையில், இந்த விலை உயர்வு, 60 காசுகளாக இருக்கும். இந்த விலை குறைப்பு மற்றும் விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, பெட்ரோல் விலை, நேற்று லிட்டருக்கு, 1.09 ரூபாய் குறைந்தது. கடந்த, மூன்றரை மாதங்களில், இது, இரண்டாவது விலை குறைப்பாகும். அதேபோல், பெட்ரோல் பங்க்குகளில், மானிய விலை விற்கப்படும் டீசல் அல்லாது, சாலை போக்குவரத்து கழகங்கள், ரயில்வே மற்றும் ராணுவத் துறைக்கு, மொத்தமாக விற்கப்படும், டீசலின் விலையும், லிட்டருக்கு, 72 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், வீடுகளுக்கு, மானிய விலையில் வழங்கப்படும், 12 சிலிண்டர்களுக்கு மேலாக, கூடுதலாக, மானியமில்லா விலையில் விற்கப்படும், சிலிண்டர் களுக்கான விலையும், 2.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் பங்க்குகளில் சில்லரை யில் விற்கப்படும், டீசலின் விலை லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் வரிகள் சேர்த்து, சென்னையில், இந்த டீசல் விலை உயர்வு, 60 காசுகளாக இருக்கும்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை, ஒவ்வொரு மாதமும், தலா, 50 காசுகள் அளவில், 2013 ஜனவரி முதல் உயர்த்தி வருகின்றன. இருந்தும், டீசல் விற்பனையில் தற்போது, 1.33 ரூபாய், எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, இன்னும், மூன்று மாதங்களுக்கு விலை உயர்வு தொடரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|