தொடர் சரிவில் ரூபாயின் மதிப்பு - மீண்டும் ரூ.61-ஐ தொட்டதுதொடர் சரிவில் ரூபாயின் மதிப்பு - மீண்டும் ரூ.61-ஐ தொட்டது ... தங்கம் விலை ரூ.48 உயர்ந்தது தங்கம் விலை ரூ.48 உயர்ந்தது ...
பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு - டீசல் விலை 50 காசுகள் அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2014
11:41

புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.09 ரூபாய் நேற்று குறைந்தது. சென்னையில், இந்த விலை குறைப்பு, 1.15 ரூபாயாக இருக்கும். அதேநேரத்தில், டீசல் விலை லிட்டருக்கு, 50 காசுகள் உயர்ந்தது. சென்னையில், இந்த விலை உயர்வு, 60 காசுகளாக இருக்கும். இந்த விலை குறைப்பு மற்றும் விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, பெட்ரோல் விலை, நேற்று லிட்டருக்கு, 1.09 ரூபாய் குறைந்தது. கடந்த, மூன்றரை மாதங்களில், இது, இரண்டாவது விலை குறைப்பாகும். அதேபோல், பெட்ரோல் பங்க்குகளில், மானிய விலை விற்கப்படும் டீசல் அல்லாது, சாலை போக்குவரத்து கழகங்கள், ரயில்வே மற்றும் ராணுவத் துறைக்கு, மொத்தமாக விற்கப்படும், டீசலின் விலையும், லிட்டருக்கு, 72 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், வீடுகளுக்கு, மானிய விலையில் வழங்கப்படும், 12 சிலிண்டர்களுக்கு மேலாக, கூடுதலாக, மானியமில்லா விலையில் விற்கப்படும், சிலிண்டர் களுக்கான விலையும், 2.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பெட்ரோல் பங்க்குகளில் சில்லரை யில் விற்கப்படும், டீசலின் விலை லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் வரிகள் சேர்த்து, சென்னையில், இந்த டீசல் விலை உயர்வு, 60 காசுகளாக இருக்கும்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை, ஒவ்வொரு மாதமும், தலா, 50 காசுகள் அளவில், 2013 ஜனவரி முதல் உயர்த்தி வருகின்றன. இருந்தும், டீசல் விற்பனையில் தற்போது, 1.33 ரூபாய், எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, இன்னும், மூன்று மாதங்களுக்கு விலை உயர்வு தொடரும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)