பதிவு செய்த நாள்
15 ஆக2014
10:52
தேனி : கடும் வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் சிறு தானியங்களின் விலை ஒரே வாரத்தில் கிலோ விற்கு 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அரிசியை விட விலை உயர்ந்தாலும் விற்பனை குறையவில்லை. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் சிறுதானியங்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதே வேளை சிறுதானியங்களை உணவாக பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தேவை அதிகரித்துள்ள நிலையில் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலைகள் உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து கேழ்வரகு வரத்து மட்டும் உள்ளது. தமிழகத்தில் மக்காச்சோளமும், சோளமும் வரத்து உள்ளது. மற்ற சிறு தானியங்கள் தற்போது வரத்து இல்லாத நிலையில், இருப்பு உள்ள சிறுதானியங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்து உள்ளன. எனவே இவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் கிலோவிற்கு 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நேற்று தேனி மார்க்கெட்டில் ஒரு கிலோ கம்பு ரூ.20, சோளம் 19.50, மக்காச்சோளம் 16.50, சாமை அரிசி 56, கேழ்வரகு 26, வரகு அரிசி 56, குதிரைவாலி அரிசி 55, தினை அரிசி 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாட்டுத்தீவனத்திற்கு பயன்படும் கம்பு 17 முதல் 18 ரூபாய் வரை விலை போகிறது. இதனால் இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாட்டுத்தீவனங்கள் விலையும் உயர்ந்துள்ளது.
தேனி வியாபாரி சீனிவாசகன் கூறுகையில், 'தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் சிறுதானியங்கள் விளைச்சல் இல்லாததால் மார்க்கெட்டில் விற்க போதுமான அளவு கூட இருப்பு இல்லை. ஆனால் சிறுதானியங்களின் தேவையும், விற்பனையும் நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. மக்கள் உடல் நலனில் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளதால், சிறிதளவு விலை உயர்வைப் பற்றி கவலைப்படுவதில்லை. அரிசி வாங்குவதை குறைத்துக் கொண்டு சிறுதானியங்களை வாங்கி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்போதைய இருப்பு அடுத்த சீசன் வரை தேவைக்கு போதாது. எனவே இன்னும் விலை உயரும் வாய்ப்புகள் உள்ளது,' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|