பதிவு செய்த நாள்
26 ஆக2014
01:00
புதுடில்லி: பங்கு சந்தை நிலவரம் நன்கு இருந்ததையடுத்து, சென்ற ஜூலையில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், கூடுதலாக, 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' தெரிவித்துள்ளது.உள்நாட்டில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட மொத்தம் கணக்குகளின் எண்ணிக்கை, சென்ற ஜூலை நிலவரப்படி, 2,93,13,290ஆக அதிகரித்துள்ளது.
இது, ஜூன் மாதத்தில், 2,92,64,713 ஆக இருந்தது.ஆக, சென்ற ஜூலையில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மட்டும், கூடுதலாக, 48,577 கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. மேலும், அம்மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நிகர முதலீடு, 17 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதையடுத்து, பரஸ்பர நிதி நிறுவன மொத்த கணக்குகளின் எண்ணிக்கை, 3,90,70,429லிருந்து, 3,91,19,588ஆக வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், கடன்பத்திரம் சார்ந்த பரஸ்பர நிதி திட்ட கணக்குகளின் எண்ணிக்கை, கணக்கீட்டு மாதத்தில், 71,34,685லிருந்து, 71,31,876ஆக குறைந்துள்ளது என, 'செபி' மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|