பதிவு செய்த நாள்
27 ஆக2014
07:17
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் நேற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.உலோகம், மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்தனர். இதையடுத்து, ‘நிப்டி’ சரிவுடனும், ‘சென்செக்ஸ்’ சிறிய ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 5.79 புள்ளிகள் அதிகரித்து, 26,442.81 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், இந்துஸ்தான் யூனிலிவர், சன்பார்மா உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், டாட்டா பவர், ஓ.என்.ஜி.சி., எல் அண்டு டி உள்ளிட்ட, 15 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி,’ 1.55 புள்ளிகள் குறைந்து, 7,904.75 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|