பதிவு செய்த நாள்
01 செப்2014
00:47
புதுடில்லி;இந்தியாவின் பொது கடன், நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 5,63,911 கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:கணக்கீட்டு காலாண்டில், மொத்த மற்றும் நிகர அளவிலான சந்தை கடன் முறையே, 6 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 4.61 லட்சம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளன. இது, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் முறையே, 6.4 சதவீதம் (5.63 லட்சம் கோடி) மற்றும் 1.6 சதவீதம் (4.53 லட்சம் கோடி) அதிகமாகும்.மதிப்பீட்டு காலாண்டில், 1.98 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு, அரசு பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 1.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.ஜூனுடன் முடிவடைந்த காலாண்டில், மத்திய அரசின் நிதி நிலைமை திருப்திகரமாக உள்ளது.மொத்த பொது கடனில், உள்நாட்டு கடனின் பங்களிப்பு, 91.4 சதவீதமாக உள்ளது. இதில், அரசு பத்திரங்களின் பங்களிப்பு, 83.4 சதவீதமாகும். மார்ச் மாத காலாண்டுடன் ஒப்பிகையில், சென்ற ஜூனுடன் முடிவடைந்த காலாண்டில், மத்திய அரசின் ஒட்டு மொத்த பொது கடன், 3.7 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|