பதிவு செய்த நாள்
03 செப்2014
00:04
புதுடில்லி:பொதுத்துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், சென்ற ஆகஸ்ட் மாதத்திலும், நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்டவில்லை.இதன்படி, அம்மாதத்தில், 3.51 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 3.45 கோடி டன் அளவிற்கே உற்பத்தி செய்துள்ளது.
அதேசமயம், இந்நிறுவனத்தின் நிலக்கரி விற்பனை இலக்கான, 3.78 கோடி டன் எட்டப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), இந்நிறுவனம், 18.34 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 17.58 கோடி டன் மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில், கோல் இந்தியாவின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி இலக்கு, 50.70 கோடி டன்னாகவும், விற்பனை இலக்கு, 52 கோடி டன்னாகவும் உள்ளது.கடந்த 2013–14ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 48.20 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், 46.20 கோடி டன் அளவிற்கே நிலக்கரி உற்பத்தி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|