பதிவு செய்த நாள்
08 செப்2014
00:35
குன்னுார்: நீலகிரி மாவட்ட மலர் சாகுபடி தொழில் நலிவடைந்ததால், விவசாயி கள் அதிகளவில் முட்டைகோஸ் பயிரிட்டு வருகின்றனர்.
நீலகிரியில், 13 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட தேயிலை விலை வீழ்ச்சியை தொடர்ந்து, ‘லாபம் கொழிக்கும் தொழில்’ என்ற அறிவிப்புடன் கொய்மலர் சாகுபடியை மாற்றுத் தொழிலாக, தோட்டக்கலை துறை பிரபலப்படுத்தியது.அரசு ஒப்புதலுடன் மானியம் வழங்கியதால், மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள், தங்கள் தோட்டத்தின் ஒரு பகுதியை பசுமைக் குடிலாக மாற்றி, கார்னேஷன், லில்லியம், ஜெர்பரா மலர்களை சாகுபடி செய்தனர்.
ஒரு செடியில், 6, 7 மலர்கள் மட்டுமே கிடைப்பதாலும், மூன்றாண்டு வரை சாகுபடி அளிக்க வேண்டிய நாற்றுகள், ஓராண்டில் அழுகி விட்டதாலும், வெளிநாடுகளில் இருந்து மலர் நாற்றுகளை வாங்கி, வினியோகிக்கும் ஏஜன்டுகள், தரமற்ற நாற்றுகளை வழங்கியதாலும், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மலர் சாகுபடி குறித்து, பூனா விவசாய கல்லுாரியின், ‘ஹைடெக் மலர் சாகுபடி திட்ட வல்லுனர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் முடிவில், ‘மலர் சாகுபடிக்கு, ரசாயன கலப்பு அதிகமுள்ள பூச்சி கொல்லி, பூஞ்சான மருந்து மற்றும் உரங்களை பயன்படுத்த வேண்டி உள்ளதால், மண்ணின் தன்மை பாதிக்கப் படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், செடி கொடி, வன விலங்குகளும் பாதிப்புக்குள்ளாவதாகவும், பசுமைக் குடிலில் பணிபுரியும் வேலையாட்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கொய்மலர் சாகுபடி பசுமைக் குடில்களில், விவசாயிகள் முட்டைகோஸ் போன்ற மலைக் காய்கறிகளை பயிரிடுவதில், ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|