சூரியசக்தி மின் உற்பத்தி900 மெகாவாட் அதிகரிக்கும்சூரியசக்தி மின் உற்பத்தி900 மெகாவாட் அதிகரிக்கும் ... வட மாநிலங்களில் அதிக கிராக்கி: ஜவ்வரிசி விலை இரு மடங்கு உயர்வு : ரசாயன கலப்படம் இல்லாததால் நல்ல வரவேற்பு வட மாநிலங்களில் அதிக கிராக்கி: ஜவ்வரிசி விலை இரு மடங்கு உயர்வு : ரசாயன ... ...
‘கை கொடுக்காத கொய்மலர் முட்டைகோசுக்கு மாறிய விவசாயிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 செப்
2014
00:35

குன்னுார்: நீலகிரி மாவட்ட மலர் சாகுபடி தொழில் நலிவடைந்ததால், விவசாயி கள் அதிகளவில் முட்டைகோஸ் பயிரிட்டு வருகின்றனர்.
நீலகிரியில், 13 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட தேயிலை விலை வீழ்ச்சியை தொடர்ந்து, ‘லாபம் கொழிக்கும் தொழில்’ என்ற அறிவிப்புடன் கொய்மலர் சாகுபடியை மாற்றுத் தொழிலாக, தோட்டக்கலை துறை பிரபலப்படுத்தியது.அரசு ஒப்புதலுடன் மானியம் வழங்கியதால், மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள், தங்கள் தோட்டத்தின் ஒரு பகுதியை பசுமைக் குடிலாக மாற்றி, கார்னேஷன், லில்லியம், ஜெர்பரா மலர்களை சாகுபடி செய்தனர்.
ஒரு செடியில், 6, 7 மலர்கள் மட்டுமே கிடைப்பதாலும், மூன்றாண்டு வரை சாகுபடி அளிக்க வேண்டிய நாற்றுகள், ஓராண்டில் அழுகி விட்டதாலும், வெளிநாடுகளில் இருந்து மலர் நாற்றுகளை வாங்கி, வினியோகிக்கும் ஏஜன்டுகள், தரமற்ற நாற்றுகளை வழங்கியதாலும், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மலர் சாகுபடி குறித்து, பூனா விவசாய கல்லுாரியின், ‘ஹைடெக் மலர் சாகுபடி திட்ட வல்லுனர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் முடிவில், ‘மலர் சாகுபடிக்கு, ரசாயன கலப்பு அதிகமுள்ள பூச்சி கொல்லி, பூஞ்சான மருந்து மற்றும் உரங்களை பயன்படுத்த வேண்டி உள்ளதால், மண்ணின் தன்மை பாதிக்கப் படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடுவதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், செடி கொடி, வன விலங்குகளும் பாதிப்புக்குள்ளாவதாகவும், பசுமைக் குடிலில் பணிபுரியும் வேலையாட்களுக்கு ஆஸ்துமா, நுரையீரல், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போது குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கொய்மலர் சாகுபடி பசுமைக் குடில்களில், விவசாயிகள் முட்டைகோஸ் போன்ற மலைக் காய்கறிகளை பயிரிடுவதில், ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)