பதிவு செய்த நாள்
14 செப்2014
06:33
புதுடில்லி: கடந்த மூன்று ஆண்டுகளில், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த ஏதுவாக, 2,470 கோடி ரூபாய் மதிப்பிலான, அலுவலக கட்டடங்களை வாங்கியுள்ளன என, சொத்து ஆலோசனை நிறுவனமான, குஷ்மன் வேக்பீல்டு தெரிவித்துள்ளது.முக்கிய நகரங்களில், வாடகை மற்றும் குத்தகை தொகை அதிகரிப்பால், பன்னாட்டு நிறுவனங்கள், நீண்ட கால செலவினத்தை கருத்தில் கொண்டு, அலுவலகங்களை சொந்தமாகவே வாங்கி வருகின்றன.இதை எடுத்துரைக்கும் விதமாக, கடந்த 2012 மற்றும் மார்ச் 2014ம் ஆண்டுகளுக்கிடையில், வர்த்தக அலுவலகங்கள் மொத்த விற்பனையில், பன்னாட்டு நிறுவனங்களின் பங்களிப்பு, 43 சதவீதமாக உள்ளது.அதாவது, இக்கால கட்டத்தில், ஒட்டு மொத்த அளவில், 5,730 கோடி ரூபாய் மதிப்பிற்கு அலுவலக இடங்கள் விற்பனையாகியுள்ளன. இதில், பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும், 2,470 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்களை கையகப்படுத்தியுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|