பதிவு செய்த நாள்
15 செப்2014
06:45
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்கள், 1,00,181 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.
இது, சென்ற ஜூலை மாதத்தில், 1,13,216 கோடியாகவும், ஜூன் மாதத்தில், 59,726 கோடி ரூபாயாகவும் இருந்தது.சென்ற ஆகஸ்டில், பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடு, ஒட்டுமொத்த அளவில், 43.67 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. அதேசமயம், இத்திட்டங்களிலிருந்து, 42.67 லட்சம் கோடி ரூபாய் விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து, பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீட்டாளர்களின் நிகர அளவிலான முதலீடு, 1 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு திட்டங்களின் மூலம், முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டி, அதை, பங்குகள், கடன்பத்திரங்கள், நிதி சந்தைகள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றன.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீடு, நிகர அளவில், 3 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது, கடந்த நிதியாண்டில், 53,783 கோடி ரூபாயாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|