பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில்முதலீட்டாளர்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுபல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில்முதலீட்டாளர்கள் ரூ.1 லட்சம் கோடி முதலீடு ... ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.61.13 ரூபாயின் மதிப்பும் சரிவு - ரூ.61.13 ...
முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.91 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2014
06:45

புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 1.52 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,91,93,000 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 4,84,56,000 கோடி டன்னாக இருந்தது என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சி:அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:உள்நாட்டில், 13 முக்கிய துறைமுகங்கள் உள்ளன. இதில், 9 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு அதிகரித்தும், 4 துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு சரிவடைந்தும் உள்ளன.தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய துறைமுகங்களுள், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 6.87 சதவீதம் சரிவடைந்து, 43.14 லட்சம் டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 46.32 லட்சம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது.
அதேசமயம், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 5.08 சதவீதம் வளர்ச்சி கண்டு, 25.18 லட்சம் டன்னிலிருந்து, 26.46 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மேலும், காமராஜர் துறைமுகம் (முன்பு எண்ணுார்) கையாண்ட சரக்கும், 2.28 சதவீதம் அதிகரித்து, 23.21 லட்சம் டன்னிலிருந்து, 23.74 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.கோல்கட்டாவில் உள்ள, கோல்கட்டா டாக் சிஸ்டம்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கு, 12.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10.62 லட்சம் டன்னாகவும், மற்றும் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் கையாண்ட சரக்கு, 1.65 சதவீதம் உயர்ந்து, 25.20 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளன.மதிப்பீட்டு மாதத்தில் பாரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கு, 3.33 சதவீதம் உயர்ந்து, 59.14 லட்சம் டன்னிலிருந்து, 61.11 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
உயர்வு:இதே போன்று, விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும், 3.25 சதவீதம் அதிகரித்து, 49.18 லட்சம் டன்னிலிருந்து, 50.78 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.மேலும், கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவும், 17.15 சதவீதம் உயர்ந்து, 19.48 லட்சம் டன்னிலிருந்து, 22.82 லட்சம் டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், நியூமங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கு, 6.40 சதவீதம் குறைந்து, 28.76 லட்சம் டன்னிலிருந்து, 26.92 லட்சம் டன்னாக சரிவடைந்துள்ளது.
கணக்கீட்டு மாதத்தில்...:கணக்கீட்டு மாதத்தில், மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கு, 6.79 சதவீதம் உயர்ந்து, 8.40 லட்சம் டன்னிலிருந்து, 8.97 லட்சம் டன்னாகவும், மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 5.26 சதவீதம் அதிகரித்து, 52.65 லட்சம் டன்னாகவும் வளர்ச்சி கண்டுள்ளன.அதேசமயம், ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் கையாண்ட சரக்கு, 1.49 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 53.75 லட்சம் டன்னிலிருந்து, 52.95 லட்சம் டன்னாகவும், கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 0.39 சதவீதம் குறைந்து, 86.91 லட்சம் டன்னிலிருந்து, 86.57 லட்சம் டன்னாகவும் சரிவடைந்துள்ளன.இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)