தாவர எண்ணெய் இறக்குமதி 13.33 லட்சம் டன்தாவர எண்ணெய் இறக்குமதி 13.33 லட்சம் டன் ... நிறுவனங்களின் அன்னிய கடன் இரண்டு மடங்கு அதிகரிப்பு நிறுவனங்களின் அன்னிய கடன் இரண்டு மடங்கு அதிகரிப்பு ...
டீசல் விலை கட்டுப்பாட்டை நீக்க இதுவே சரியான தருணம்: ரகுராம் ராஜன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2014
00:40

மும்பை: சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், டீசல் மீதான விலை நிர்ணய கட்டுப்பாட்டை, முழுவதுமாக விலக்கிக் கொள்ள, மத்திய அரசுக்கு இதுவே சரியான தருணம் என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.‘பிக்கி’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், இதுகுறித்து மேலும் கூறியதாவது:கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது என்பது, அதை அதிகளவில் பயன்படுத்தும் நம்மைப் போன்ற நாடுகளுக்கு, பேருதவியாக அமைந்துள்ளது. இதனால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைவதோடு, மானியங்கள் மற்றும் பணவீக்கமும் குறையும்.
இச்சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, மத்திய அரசு, டீசல் விலை கட்டுப்பாட்டை கைவிடுவதோடு, டீசலுக்கான மானியத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.மேலும், எண்ணெய் நிறுவனங்களின் வசமே, டீசல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.பிரதமர் மக்கள் நிதி திட்டம், மிகவும் சிறப்பானது. இத்திட்டத்தில், பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், வங்கிகள் அவசரம் காட்டாமல், எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இத்திட்டத்தின் அடிப்படை நோக்கத்தில், சமரசத்திற்கு இடமளிக்க கூடாது என, வங்கிகளை கேட்டுக் கொண்டார்.போலி கணக்குகள், பரிவர்த்தனை நடைபெறாதது மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் மோசமான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தால், இத்திட்டம் பயனற்ற ஒன்றாகி விடும்.இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார்.கடந்த ஜூன் மாதம் முதல், பிரண்ட் கச்சா எண்ணெய் விலை, 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதையடுத்து, ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 96.38 டாலராக குறைந்துள்ளது.இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள், மாதத்திற்கு ஒரு முறை டீசல் விலையை, லிட்டருக்கு, 50 காசுகள் உயர்த்தி வருகிறது. இதனால், ஒரு டீசல் விற்பனையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு, முன் எப்போதும் இல்லாத அளவில், 8 காசாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)