பதிவு செய்த நாள்
17 செப்2014
23:58
புதுடில்லி :வரும் 2018ம் ஆண்டிற்குள், இந்தியாவின் பொழுதுபோக்கு மற்றும் ஊடக துறையின் சந்தை மதிப்பு, 2.27 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, சி.ஐ.ஐ., – பிரைஸ்வாட்டர் ஹவுஸ்கூப்பர்ஸ் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த 2013ம் நிதியாண்டில், இத்துறையின் சந்தை மதிப்பு, 1.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், தொலைக்காட்சி துறையின் சந்தா வருவாய் பங்களிப்பு, ஆண்டுக்கு, 15 சதவீதம் என்ற அளவில், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.இதே போன்று, இணையம் மற்றும் இணையதள விளம்பர சந்தை பிரிவுகள், ஆண்டுக்கு முறையே, 47 சதவீதம் மற்றும் 26 சதவீதம் என்ற அளவில் வளர்சி கண்டு வருகின்றன.
இது போன்ற காரணங்களால், வரும் 2018ம் ஆண்டிற்குள், விளம்பரங்கள் வாயிலான வருவாய், ஒட்டுமொத்த அளவில், 13 சதவீதம் உயர்ந்து, 60 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது. இது, 2013ம் ஆண்டில், 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இணையதள பயன்பாடு அதிகரித்து வருவதையடுத்து, பொழுதுபோக்கு துறையில், டிஜிட்டல் ஊடகங்களின் பங்களிப்பு முதன்மையானதாக இருக்கும் என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|