பதிவு செய்த நாள்
18 செப்2014
00:01
திருப்பூர் :நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 22 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி விறுவிறுப்படைந்துள்ளது.வளர்ச்சி பாதைகடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த ஆயத்த ஆடை உற்பத்தி துறை, தற்போது வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.இதனை எடுத்துக்காட்டும் வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 22 சதவீதம் வளர்ச்சி கண்டு, 42,492 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 34,939 கோடி ரூபாயாக இருந்தது.
இதுகுறித்து, ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சக்திவேல் கூறுகையில், ‘‘அனைத்து வகையிலும் ஜவுளி துறைக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. ஆடை உற்பத்திக்கு ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளதால், நடப்பு நிதியாண்டில் திருப்பூரின் ஆடைகள் ஏற்றுமதி, 21 ஆயிரம் கோடி ரூபாயை எட்டிவிடும்,’’ என்று தெரிவித்தார்.
கோவை ‘டெக்ஸ்பிரனர்ஸ்’ அமைப்பு செயலர் பிரபு தாமோதரன் கூறும்போது:இந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு, குறைவான விலையில் நுாலிழை கிடைக்கிறது. இதனால், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.அதிக விலைஅதேசமயம் நுாற்பாலைகள், மூலப்பொருளான பருத்தியை, பிற நாடுகளை காட்டிலும் அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
இதனால், நான்கு மாதங்களாக நுாற்பாலைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. மத்திய அரசு, இந்திய பருத்தி கழகம் மூலம், பருத்தி விலையை ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மூலப்பொருள் இருப்பு வைக்க தேவையான நிதியுதவி வழங்கினால் மட்டுமே, நுாற்பாலைகளின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|