உலக மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம்உலக மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 6வது இடம் ... ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.60.74 ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.60.74 ...
இந்தியா – சீனா வர்த்தக ஒப்பந்தங்களால்பங்கு சந்தையில் எழுச்சி நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2014
04:04

மும்பை:இந்தியா – சீனா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், 12 ஒப்பந்தங்கள் கையொப்பமானது. இதன்பயனாக, சீனா, ஐந்து ஆண்டுகளில், 1.20 லட்சம் கோடி ரூபாயை (2 ஆயிரம் கோடி டாலர்), இந்தியாவில் முதலீடு மேற்கொள்ள உள்ளது.இதுதவிர, வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல், பழைய நிலையே (௦ சதவீதம்) தொடரும் என்ற அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பும், முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.இதன் காரணமாக, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 1.81 சதவீதம் மற்றும் 1.75 சதவீதம் அதிகரித்தன.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 4.65 சதவீதம் வரை உயர்ந்தது.
இதையடுத்து, நுகர்வோர் சாதனங்கள் (3.17 சதவீதம்), பொறியியல் (2.84 சதவீதம்) மற்றும் மோட்டார் வாகனம் (2.67 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும், குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தன.மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 480.92 புள்ளிகள் அதிகரித்து, 27,112.21 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி., டாட்டா மோட்டார்ஸ், எல் அண்டு டி உள்ளிட்ட, 28 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்கின் விலை, 5.57 சதவீதம் அதிகரித்தது.அதேசமயம், இன்போசிஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய இரண்டு நிறுவனப் பங்கின் விலை மட்டும் சரிவடைந்து போனது.தேசிய பங்குச் சந்தை யின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 139.25 புள்ளிகள் உயர்ந்து, 8,114.75 புள்ளிகளில் நிலைபெற்றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)