பதிவு செய்த நாள்
19 செப்2014
04:04
மும்பை:இந்தியா – சீனா இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில், 12 ஒப்பந்தங்கள் கையொப்பமானது. இதன்பயனாக, சீனா, ஐந்து ஆண்டுகளில், 1.20 லட்சம் கோடி ரூபாயை (2 ஆயிரம் கோடி டாலர்), இந்தியாவில் முதலீடு மேற்கொள்ள உள்ளது.இதுதவிர, வட்டி விகிதங்கள் மாற்றமில்லாமல், பழைய நிலையே (௦ சதவீதம்) தொடரும் என்ற அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பும், முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.இதன் காரணமாக, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 1.81 சதவீதம் மற்றும் 1.75 சதவீதம் அதிகரித்தன.நேற்றைய வியாபாரத்தில், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 4.65 சதவீதம் வரை உயர்ந்தது.
இதையடுத்து, நுகர்வோர் சாதனங்கள் (3.17 சதவீதம்), பொறியியல் (2.84 சதவீதம்) மற்றும் மோட்டார் வாகனம் (2.67 சதவீதம்) ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண்களும், குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தன.மும்பை பங்குச் சந்தை யின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 480.92 புள்ளிகள் அதிகரித்து, 27,112.21 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எச்.டீ.எப்.சி., டாட்டா மோட்டார்ஸ், எல் அண்டு டி உள்ளிட்ட, 28 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனப் பங்கின் விலை, 5.57 சதவீதம் அதிகரித்தது.அதேசமயம், இன்போசிஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய இரண்டு நிறுவனப் பங்கின் விலை மட்டும் சரிவடைந்து போனது.தேசிய பங்குச் சந்தை யின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 139.25 புள்ளிகள் உயர்ந்து, 8,114.75 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|