பதிவு செய்த நாள்
23 செப்2014
00:59
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, காலையில் துவங்கியதும் மந்தமாக காணப்பட்டது.இந்நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியதை அடுத்து, மதியத்திற்கு பின், வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் காரணமாக, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.43 சதவீதம் மற்றும் 0.31 சதவீதம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், நுகர் பொருட்கள், மோட்டார் வாகனம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது.
அதேசமயம், உலோகம், மருந்து துறை குறியீட்டு எண்கள் முறையே, 1.22 சதவீதம் மற்றும் 0.89 சதவீதம் சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 116.32 புள்ளிகள் உயர்ந்து, 27,206.74 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., டாட்டா மோட்டார்ஸ், ஐ.டி.சி., உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சிப்லா, பெல், இன்போசிஸ் உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி,’ 24.85 புள்ளிகள் உயர்ந்து, 8,146.30 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|