பதிவு செய்த நாள்
24 செப்2014
02:47
புதுடில்லி: அமெரிக்காவில், குறுகிய கால அடிப்படையில் பணிபுரிந்து நாடு திரும்பும், இந்திய பணியாளர்கள், அந்நாட்டின் சமூக பாதுகாப்பு நிதியத்தில் செலுத்தும் தொகையை திரும்ப கொண்டு வருவதற்கு அனுமதி அளிப்பது குறித்து, அதிபர் பராக் ஒபாமாவிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஆண்டுதோறும், இந்தியாவிலிருந்து, 80 ஆயிரம் பேர், அமெரிக்காவிற்கு நேரடியாக சென்று திட்டங்களை முடித்து கொடுக்கும் வகையில், பகுதி நேர பணியாளர்களாக அனுப்பப்படுகின்றனர். அவர்களின் அடிப்படை சம்பளத்தில், 15 சதவீதம் அதாவது, 100 கோடி டாலர் அளவிற்கு, அமெரிக்க சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது.அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம், இந்திய பணியாளர்கள், நாடு திரும்பும் போது, திரும்பப் பெறமுடியாத சூழல் நிலவுகிறது. நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|