மிளகாய் விளைச்சலை தீவிரப்படுத்தினால்யானை தாக்குதலை தடுக்கலாம்மிளகாய் விளைச்சலை தீவிரப்படுத்தினால்யானை தாக்குதலை தடுக்கலாம் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.01 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.01 ...
அன்னிய முதலீட்டிற்காக கட்டுமான துறை விதிமுறைகள் தளர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2014
02:52

புதுடில்லி :நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கட்டுமான துறையில், அன்னிய நேரடி முதலீட்டை அதிகளவில் கவரும் வகையில், பல்வேறு கட்டுப்பாடு களை தளர்த்த உள்ளது.விதிமுறைஇதன்படி, குறைந்த விலை வீடுகள் மற்றும் மத்திய அரசு அமைக்கும் 100 ஸ்மார்ட் நகரங்களில், அன்னிய முதலீட்டை ஈர்க்க தடையாக இருக்கும் அனைத்து அம்சங்களையும் நீக்க, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது என, மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, இந்திய கட்டுமான துறையில் களமிறங்கும், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் கட்டாய இருப்பு காலம் மூன்று ஆண்டாக உள்ளது. இந்த விதிமுறை, அன்னிய முதலீட்டை கவர பெரும் தடைக்கல்லாக உள்ளது.எனவே, புதிய அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையில், இந்த விதிமுறை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன்படி, திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் அல்லது அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலின் பேரில், நிறுவனங்கள் வெளியேற அனுமதி அளிக்கப்பட உள்ளது.மேலும், குறைந்தபட்ச கட்டட பரப்பளவை, 50 ஆயிரம் சதுரமீட்டரிலிருந்து, 20 ஆயிரம் சதுர மீட்டராக குறைக்க, திட்ட மிடப்பட்டுள்ளது. குறைந்த பட்ச முதலீட்டு அளவும், 1 கோடி டாலரிலிருந்து, 50 லட்சம் டாலராக குறைக்கப்பட உள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளால், அன்னிய முதலீட்டை வெகுவாக கவர்ந்து, கட்டுமான திட்டங்களை வேகமாக முடிக்க முடியும் என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், கட்டுமான துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 120 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய 2012 – 13ம் நிதியாண்டை காட்டிலும், 8 சதவீதம் குறைவாகும்.பங்களிப்பு;கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2014ம் ஆண்டு ஜூலை வரையிலுமாக, வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட கட்டுமான மேம்பாட்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 2,377 கோடி டாலராக இருந்தது. இது, நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த அன்னிய நேரடி முதலீட்டில், 10.4 சதவீத பங்களிப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)