பதிவு செய்த நாள்
26 செப்2014
23:32
சிங்கப்பூர்:இந்தியாவின், மெகா 100 பணக்காரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8வது முறையாக, முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.
கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது, இவருடைய சொத்து மதிப்பு, 260 கோடி டாலர் (15,600 கோடி ரூபாய்) உயர்ந்து, 2,360 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இவரைத் தொடர்ந்து, சன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனர், திலிப் சங்வி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு, 410 கோடி டாலர் அதிகரித்து, 1,800 கோடி டாலராக உயர்ந்துள்ளது.மூன்றாவது இடத்தில், விப்ரோ அசிம் பிரேம்ஜி உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு, 1,380 கோடி டாலரிலிருந்து, 1,640 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.
இவர்களையடுத்து, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் முறையே, பலோன்ஜி மிஸ்திரி (1,590 கோடி டாலர்) மற்றும் லஷ்மி மிட்டல் (1,580 கோடி டாலர்) ஆகியோர் உள்ளனர். அதேசமயம், கடந்தாண்டில், 80 கோடி டாலர் நிகர சொத்து மதிப்புடன், 84வது இடத்தை பிடித்திருந்த, யுனைடெட் பிரீவரிஸ் குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா, இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, 34,600 கோடி டாலராக (20.76 லட்சம் கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த 2013ம் ஆண்டில், 25,900 கோடி டாலராக (15.54 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது என, போர்ப்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|