மெமரி கார்டு திறனை அதிகரிக்க காந்தி கிராம பல்கலை முயற்சிமெமரி கார்டு திறனை அதிகரிக்க காந்தி கிராம பல்கலை முயற்சி ... பிளாக்பெர்ரியின்பாஸ்போர்ட் ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரியின்பாஸ்போர்ட் ஸ்மார்ட்போன் ...
உருக்கு பயன்பாடு 3 சதவீதம் உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
00:00

புதுடில்லி: நடப்பு 2014–15ம் நிதியாண்டில், உள்நாட்டில் உருக்கு பயன்பாடு, 3 சதவீதம் வளர்ச்சி காணும் என, மத்திய உருக்கு அமைச்சக கூட்டு ஆலைகள் குழுவின் (ஜே.பி.சி.,) தலைமை பொருளாதார வல்லுனர் ஏ.எஸ்.பிரோஸ் கூறினார்.மந்த நிலை:இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாகவே உருக்கு பயன்பாட்டில், மந்த நிலை நீடித்து வருகிறது.குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், உருக்கு பயன்பாட்டில் சுணக்க நிலை காணப்படுகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக, ஏப்ரல் – ஆகஸ்ட் வரையில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு,வெறும், 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 3.11 கோடி டன்னாக உள்ளது.இந்நிலையில், எஞ்சியுள்ள மாதங்களிலும், உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி, 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதன் பயன்பாடு, 3 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும்.இவ்வாறு, பிரோஸ் தெரிவித்தார்.கட்டுமானம்நாட்டின் மொத்த உருக்கு பயன்பாட்டில், கட்டுமான துறையின் பங்களிப்பு, 60 சதவீதமாகவும், மோட்டார் வாகன துறையின் பங்களிப்பு, 15 சதவீதமாகவும் உள்ளன.பொருளாதார சுணக்கம் காரணமாக, மேற்கண்ட துறைகள் பாதிக்கப்பட்டதால், கடந்த, 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு, 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவாக, 7.39 கோடி டன்னாக சரிவடைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)