பதிவு செய்த நாள்
30 செப்2014
00:00
புதுடில்லி: நடப்பு 2014–15ம் நிதியாண்டில், உள்நாட்டில் உருக்கு பயன்பாடு, 3 சதவீதம் வளர்ச்சி காணும் என, மத்திய உருக்கு அமைச்சக கூட்டு ஆலைகள் குழுவின் (ஜே.பி.சி.,) தலைமை பொருளாதார வல்லுனர் ஏ.எஸ்.பிரோஸ் கூறினார்.மந்த நிலை:இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாகவே உருக்கு பயன்பாட்டில், மந்த நிலை நீடித்து வருகிறது.குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், உருக்கு பயன்பாட்டில் சுணக்க நிலை காணப்படுகிறது.இதற்கு எடுத்துக்காட்டாக, ஏப்ரல் – ஆகஸ்ட் வரையில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு,வெறும், 0.3 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 3.11 கோடி டன்னாக உள்ளது.இந்நிலையில், எஞ்சியுள்ள மாதங்களிலும், உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி, 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், இதன் பயன்பாடு, 3 சதவீதம் அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும்.இவ்வாறு, பிரோஸ் தெரிவித்தார்.கட்டுமானம்நாட்டின் மொத்த உருக்கு பயன்பாட்டில், கட்டுமான துறையின் பங்களிப்பு, 60 சதவீதமாகவும், மோட்டார் வாகன துறையின் பங்களிப்பு, 15 சதவீதமாகவும் உள்ளன.பொருளாதார சுணக்கம் காரணமாக, மேற்கண்ட துறைகள் பாதிக்கப்பட்டதால், கடந்த, 2013–14ம் நிதியாண்டில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு, 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவாக, 7.39 கோடி டன்னாக சரிவடைந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|