நாட்டின் கரீப் சாகுபடி பரப்பு10 கோடி ஹெக்டேரை தாண்டியதுநாட்டின் கரீப் சாகுபடி பரப்பு10 கோடி ஹெக்டேரை தாண்டியது ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.74 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.61.74 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரிசர்வ் வங்கி நிதி கொள்கை எதிர்பார்ப்பால்சென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
00:08

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க தினமான நேற்று, சரிவுடன் முடிவடைந்தது.ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட உள்ள நிதி ஆய்வு கொள்கையை கருத்தில் கொண்டு, சில்லரை முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 0.11 சதவீதம் மற்றும் 0.12 சதவீதம் சரிவை கண்டன.நேற்றைய வியாபாரத்தில், உலோக துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 1.11 சதவீதம் சரிவை கண்டது.
இதையடுத்து, நுகர் பொருட்கள் (–0.92 சதவீதம்), வங்கி (–0.91 சதவீதம்) ஆகியவை உள்ளன.அதேசமயம், மருந்து துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 2.21 சதவீதம் ஏற்றம் கண்டது.இதையடுத்து, தகவல் தொழில்நுட்பம் (1.84 சதவீதம்), நுகர்வோர் சாதனங்கள் (1.79 சதவீதம்) துறைகளின் குறியீட்டு எண்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தன.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 29.21 புள்ளிகள் சரிவடைந்து, 26,597.11 புள்ளிகளில் நிறைவடைந்தது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சேசா ஸ்டெர்லைட், டாட்டா ஸ்டீல், கோல் இந்தியா உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன் பார்மா, டி.சி.எஸ்., கெயில் உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 9.95 புள்ளிகள் குறைந்து, 7,958.90 புள்ளிகளில் நிலைகொண்டது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)