பதிவு செய்த நாள்
30 செப்2014
11:37
மும்பை : பணவீக்கம் குறைந்த போதிலும் வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கடன் வெளியீட்டு கூட்டம் இன்று(செப். 30ம் தேதி) நடந்தது. கூட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பேசியதாவது :
வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரெப்போ வட்டி வகிதம் 8 சதவீதத்திலயே நீடிக்கும். நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி 5.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பெரும் சவாலாக இருக்கிறது. முதல்காலாண்டில் இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாம், மூன்றாம் காலாண்டில் இருக்குமா என்பது தெரியவில்லை. பணவீக்கத்தை பொறுத்து எதிர்காலத்தில் கொள்கை மாறலாம். 2016ம் ஆண்டுக்குள் சில்லரை வர்த்தக பணவீக்கம் 6 சதவீதமாக குறைக்கப்படும்.
இவ்வாறு ரகுராஜன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|