பதிவு செய்த நாள்
30 செப்2014
23:57
மும்பை:சர்வதேச நிலவரங்கள் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, அதன் நிதி ஆய்வுக் கொள்கையில், 'ரெப்போ' மற்றும் 'ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யவில்லை.பணவீக்கம்இதையடுத்து, ரிசர்வ் வங்கி, குறுகிய கால அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான 'ரெப்போ' வட்டி விகிதம், 8 சதவீதம் என்ற அளவிலேயே விடப்பட்டுள்ளது.
இதே போன்று, வங்கிகள் திரட்டும் மொத்த டிபாசிட்டில், குறிப்பிட்ட தொகையை, ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்கும் ரொக்க இருப்பு விகிதம் (சி.ஆர்.ஆர்.,) 4 சதவீதம் என்ற அளவிலும், வங்கிகளுக்கான சட்டப்பூர்வ ஆயத்த இருப்பு தொகை விகிதம் (எஸ்.எல்.ஆர்.,), 22 சதவீதம் என்ற அளவிலும் தொடர்ந்து நீடிக்கும்.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருக்கும் எனவும், வரும் நிதியாண்டில், இது, 6.3 சதவீதமாக உயரும் எனவும் ரிசர்வ் வங்கி, தெரிவித்துள்ளது.நிதி ஆய்வு கொள்கை குறித்து, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியதாவது:வரும், 2015ம் ஆண்டு ஜனவரிக்குள், மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கத்தை, 8 சதவீதம் என்ற அளவில் வைத்திருக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறிய வங்கி:இதற்கு ஏற்ப, தற்போதைய நிலையில், பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்றாலும், பருவமழை மாறுபாடுகளால், உணவுப் பொருட்கள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சர்வதேச நிலவரங்களிலும் சாதகமான முன்னேற்றம் எதுவும் தென்படவில்லை.இது போன்றவற்றை கருத்தில் கொண்டு, முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்படவில்லை.சிறிய வங்கி மற்றும் பணப்பட்டுவாடா வங்கிகளுக்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகள் நவம்பர் இறுதிக்குள் வெளியாகும்.
அதேசமயம், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (என்.பி.எப்.சி.,) மாற்றம் செய்யப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்த இறுதி நெறிமுறைகள் அக்டோபருக்குள் அறிமுகப்படுத்தப்படும்.மேலும், பொதுமக்கள் எளிதாக கணக்கை துவக்கும் மற்றும் புதுப்பிக்கும் வகையில், சுய அத்தாட்சி ஆவணங்களை வங்கிகள் ஏற்றுகொள்ள வேண்டும். இதற்காக, 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்' (கே.ஒய்.சி.,), விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, ராஜன் கூறினார்.
தொழில்துறைபொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என, தொழில்துறையினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.இந்நிலையிலும், தொடர்ந்து நான்காவது முறையாக, ரிசர்வ் வங்கி, முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ரெப்போ வட்டி விகிதங்கள் குறைக்கப்படாததையடுத்து, வங்கிகள் வழங்கும், வீட்டு வசதி மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பில்லை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|