பதிவு செய்த நாள்
09 அக்2014
01:17
புதுடில்லி :இந்தியாவின் புண்ணாக்கு ஏற்றுமதி, சென்ற செப்டம்பர் மாதத்தில், 73 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 82,749 டன்னாக சரிவடைந்து உள்ளது என, எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.
கடந்தாண்டின் இதே மாதத்தில், இதன் ஏற்றுமதி, 3,01,717 டன்னாக மிகவும் அதிகரித்து காணப் பட்டதுசோயா உற்பத்திகடந்த ஆறு மாதங்களில், முதன் முறையாக, சென்ற செப்டம்பரில் தான், புண்ணாக்கு ஏற்றுமதி, 1 லட்சம் டன்னிற்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.உள்நாட்டில் சோயா உற்பத்தி எதிர்பார்ப்பை விட குறைந்துள்ளது. இதையடுத்து, உள்நாட்டு சந்தைகளில், இதன் விலை மிகவும் அதிகரித்துள்ளதோடு, அயல்நாடுகளிலும், இதன் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது.
இது போன்ற காரணங்களால், கடந்த ஆறு மாதங்களாகவே, சோயா புண்ணாக்கு ஏற்றுமதி சுணக்கம் கண்டுள்ளது. அதேசமயம், கடுகு புண்ணாக்கு ஏற்றுமதி சூடுபிடித்துள்ளது. மதிப் பீட்டு மாதத்தில், ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில், சோயா புண்ணாக்கு ஏற்றுமதியின் பங்களிப்பு, வெறும் 868 டன்னாக மட்டுமே உள்ளது.அதேசமயம், கடுகு புண்ணாக்கு 58,567 டன்னும், தவிட்டு புண்ணாக்கு 1,500 டன்னும், ஆமணக்கு புண்ணாக்கு 21,814 டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
தென்கொரியா, நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதி, 43 சதவீதம் சரிவடைந்து, 16,57,697 டன்னிலிருந்து, 9,50,599 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதில், தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 10.35 சதவீதம் குறைந்து, 4,64,555 டன்னாகவும், ஈரானிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 75 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,42,357 டன்னாகவும் சரிவடைந்து உள்ளன.
மேலும், இந்தோனேஷியா, தைவான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் ஐரோப்பா நாடுகளுக் கான ஏற்றுமதியும். கடந்த ஆறு மாதங்களாக குறைந்து உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|