கிளை நிறுவனங்கள் துவக்கி டி.எல்.எப்., மோசடிகிளை நிறுவனங்கள் துவக்கி டி.எல்.எப்., மோசடி ... தங்கம் விலை ரூ.24 குறைவு தங்கம் விலை ரூ.24 குறைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நவ.,12ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2014
11:51

சென்னை : ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, நவ., 12ம் தேதி, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. கூட்டமைப்பின் கூட்டம் பெங்களூரில் நேற்று நடந்தது. இதில், வேலைநிறுத்தம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கூட்டமைப்பின் பொதுச்செயலர் சீனிவாசன் கூறியதாவது: வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், காலாவதியாகி இரு ஆண்டுகள் ஆகிறது. இதைத் தொடர்ந்து, புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த, பல கட்டப் பேச்சுவார்த்தையை, வங்கி நிர்வாகத்துடன், கூட்டமைப்பினர் நடத்தினர். இதில், 25 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கையை, வங்கி நிர்வாகம் ஏற்கவில்லை. மாறாக, 11 சதவீத ஊதிய உயர்வு அளிக்க முன்வந்துள்ளது; இதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 17 மற்றும் 30ம் தேதிகளில், நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறோம். நவ., 12ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இதன்பின்னும், புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வில்லை எனில், நாட்டில் உள்ள தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய வங்கி மண்டலங்கில், ஒருநாள் வீதம் தொடர்ந்து நான்கு நாள்கள், வேலைநிறுத்தத்தை, டிச., 2ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளோம். இப்போராட்டங்களுக்கு, வங்கி நிர்வாகங்கள் மதிப்பு அளிக்கவில்லை எனில், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை, டிசம்பரில் அறிவிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)