பதிவு செய்த நாள்
15 அக்2014
11:51
சென்னை : ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, நவ., 12ம் தேதி, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது. கூட்டமைப்பின் கூட்டம் பெங்களூரில் நேற்று நடந்தது. இதில், வேலைநிறுத்தம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கூட்டமைப்பின் பொதுச்செயலர் சீனிவாசன் கூறியதாவது: வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், காலாவதியாகி இரு ஆண்டுகள் ஆகிறது. இதைத் தொடர்ந்து, புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த, பல கட்டப் பேச்சுவார்த்தையை, வங்கி நிர்வாகத்துடன், கூட்டமைப்பினர் நடத்தினர். இதில், 25 சதவீத ஊதிய உயர்வு கோரிக்கையை, வங்கி நிர்வாகம் ஏற்கவில்லை. மாறாக, 11 சதவீத ஊதிய உயர்வு அளிக்க முன்வந்துள்ளது; இதனால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 17 மற்றும் 30ம் தேதிகளில், நாடு முழுவதும் போராட்டம் நடத்துகிறோம். நவ., 12ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். இதன்பின்னும், புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வில்லை எனில், நாட்டில் உள்ள தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு ஆகிய வங்கி மண்டலங்கில், ஒருநாள் வீதம் தொடர்ந்து நான்கு நாள்கள், வேலைநிறுத்தத்தை, டிச., 2ம் தேதி முதல், 5ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளோம். இப்போராட்டங்களுக்கு, வங்கி நிர்வாகங்கள் மதிப்பு அளிக்கவில்லை எனில், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை, டிசம்பரில் அறிவிப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|