பதிவு செய்த நாள்
15 அக்2014
23:45
சேலம்: தீபாவளி பண்டிகை, வடமாநிலங்களில் தேர்தல், ஆகியவற்றின் காரணமாக, பாசிப் பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில், சட்டசபை தேர்தல் காரணமாக, அங்கிருந்து தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் பாசிப்பயறு, பாசி பருப்பின் வரத்து சரிந்துள்ளது.தீபாவளி பண்டிகைக்கு, ஒரு வாரமே உள்ள நிலையில், பாசி பருப்பின் தேவையும் அதிகரித்துள்ளதால், மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால், விலை மேலும் உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக பாசி பயறு விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. தமிழக பருப்பு மில்களுக்கு தேவையான பாசி பயறு, பாசி பருப்பு மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்தே விற்பனைக்கு வருகின்றன.கடந்த வாரம் வரை, பாசி பயிறு, பாசி பருப்பின் வரத்து, 150 லாரிகளாக இருந்தது. வடமாநிலங்களில் சட்டசபை தேர்தல் காரணமாக, சோதனை அதிகரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டுக்களான சென்னை, சேலம் லீபஜார், விருதுநகர் ஆகிய இடங்களுக்கு வாரத்துக்கு, 100 லாரிகளில் மட்டுமே பாசி பருப்பு விற்பனைக்கு வருகின்றன.
பெரிய வியாபாரிகள், பருப்பு தயாரிப்பு நிறுவனங்கள் விலை உயர்வை எதிர்பார்த்து கையிருப்பை அதிகரித்து வருகின்றன.மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் பாசி பருப்பின் வரத்தில் சரிவு ஏற்பட்டதை அடுத்து, அதன் விலை, குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை எகிறியுள்ளது.
கடந்த வாரம் மொத்த விலையில், பாசி பருப்பு முதல் ரகம் குவிண்டால், 9,900 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் குவிண்டால், 9,500 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 9,300 ரூபாய்க்கும் விற்றது.இந்நிலையில், குவிண்டாலுக்கு, 600 ரூபாய் வரை உயர்வு ஏற்பட்டதையடுத்து, முதல் ரகம் குவிண்டால், 10,500 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம் குவிண்டால், 10,000 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 9,600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சில்லரை விலையில் முதல் ரகம் கிலோ, 106 ரூபாய்க்கும், இரண்டாம் ரகம், 102 ரூபாய்க்கும், மூன்றாம் ரகம், 95 ரூபாய் முதல், 98 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|