பதிவு செய்த நாள்
15 அக்2014
23:48
புதுடில்லி: நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி, கடந்த செப்டம்பரில், 25 சதவீதம் சரிவடைந்து, 60 ஆயிரம் டன்னாக குறைந்து உள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 80 ஆயிரம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், மதிப்பீட்டு மாதத்தில் இதன் பயன்பாடு, 80,500 டன்னிலிருந்து, 85,500 டன்னாக அதிகரித்துள்ளது.இயற்கை ரப்பர் இறக்குமதி, 47,899 டன்னிலிருந்து, 41,848 டன்னாக குறைந்துள்ளது. மேலும், மதிப்பீட்டு மாதத்தில், இதன் ஏற்றுமதி, 1,098 டன்னிலிருந்து, வெறும் 8 டன்னாக மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இயற்கை ரப்பர் உற்பத்தி, 2.3 சதவீதம் குறைந்து, 3.37 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 3.45 லட்சம் டன்னாக இருந்தது.இதே காலத்தில், இதன் பயன்பாடு, 3.6 சதவீதம் உயர்ந்து, 4.91 லட்சம் டன்னிலிருந்து, 5.09 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மதிப்பீட்டு ஆறு மாத காலத்தில், இயற்கை ரப்பர் இறக்குமதி, 1.81 லட்சம் டன்னிலிருந்து, 2.25 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், இதன் ஏற்றுமதி, 3,495 டன்னிலிருந்து, வெறும், 163 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது என, ரப்பர் வாரியத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|