பதிவு செய்த நாள்
20 அக்2014
01:20
புதுடில்லி:நாட்டின் உருக்கு ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), 0.4சதவீதம் மட்டும் வளர்ச்சி கண்டு, 26.90 லட்சம்டன்னாக சற்றே உயர்ந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 26.80 லட்சம் டன்னாக இருந்தது என, மத்திய உருக்கு அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில், சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது மற்றும் உள்நாட்டு உருக்கு தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி செலவுஅதிகரிப்பு போன்றவற்றால், உருக்கு ஏற்றுமதி விறுவிறுப்படையவில்லை என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேசமயம், உருக்கு இறக்குமதி, மதிப்பீட்டு காலத்தில், 26.9 சதவீதம் உயர்ந்து, 38 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது.உலகளவில் உருக்கு உற்பத்தியில், இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|