பதிவு செய்த நாள்
21 அக்2014
00:28
புதுடில்லி: இந்தியா மற்றும் சீனாவில் கம்ப்யூட்டருக்கான தேவை, எதிர்பார்த்ததை விட சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு உள்ளது.வியட்நாம்இதனால், நடப்பாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் (ஜப்பான் தவிர்த்து), கம்ப்யூட்டர் விற்பனை, 8 சதவீதம் அதிகரித்து, 2.66 கோடியாக உயர்ந்துள்ளது என, ஐ.டி.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவை பொறுத்தவரை, மத்தியில் புதிய அரசு பதவியேற்று கொண்டது முதல் கம்ப்யூட்டர் விற்பனையில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.அதேசமயம், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளில், இதன் விற்பனை மந்தமடைந்துள்ளது.
இந்நிலையில், வியட்நாமில் கம்ப்யூட்டர் விற்பனை சிறப்பாக உள்ளது.லெனோவாமதிப்பீட்டு காலாண்டில், இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கம்ப்யூட்டர் விற்பனையில், லெனோவா நிறுவனம், 27.4 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, 11.1 சதவீத சந்தை பங்களிப்புடன் டெல் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது.இரண்டாவது காலாண்டில், 10.3 சதவீதமாக எச்.பி., நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, மூன்றாவது காலாண்டில், 10.1 சதவீதமாக குறைந்து உள்ளது.ஏசஸ் மற்றும் ஏசர் நிறுவனங்கள் தலா, 7.7 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளன.இந்நிறுவனங்களின், குறைந்தவிலை நோட்புக்ஸ் கம்ப்யூட்ர்களுக்கு, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளில் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது என, ஐ.டி.சி., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|