பதிவு செய்த நாள்
21 அக்2014
00:42
மும்பை : மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் பா.ஜ., வெற்றி எதிரொலியால், நேற்றைய பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.மத்திய அரசு, டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை நீக்கியது மற்றும் இயற்கை எரிவாயு விலையை உயர்த்தியது. இதுபோன்ற நடவடிக்கைகளால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது.நேற்றைய வியாபாரத்தில், பொதுத்துறை (2.64 சதவீதம்), மோட்டார் வாகனம் (2.17 சதவீதம்), பொறியியல் (2.14 சதவீதம்) மற்றும் எண்ணெய் – எரிவாயு (1.94 சதவீதம்) துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தன. அதேசமயம், தகவல் தொழில்நுட்ப துறை குறியீட்டு எண், 0.83 சதவீதம் சரிவை கண்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 321.32 புள்ளிகள் அதிகரித்து, 26,429.85 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., ஹிண்டால்கோ, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 99.70 புள்ளிகள் உயர்ந்து, 7,879.40 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|