பதிவு செய்த நாள்
22 அக்2014
00:18
ஓசூர்:ரோஜா விலை வீழ்ச்சியால், ஒரே மாதத்தில், 5 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, ஓசூர் விவசாயிகள் தெரிவித்தனர்.
ஓசூர் பகுதியில், 4,000 ஏக்கரில், பசுமை குடில் அமைத்து, ரோஜா சாகுபடி நடக்கிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் ரோஜாக்கள், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து மற்றும் அரேபிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதம் முதல், ரோஜாக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. ஒரு ரோஜா பூ உற்பத்தி செய்ய, 3.50 காசுகள் செலவாகிறது. இந்நிலையில் ஒன்று, 2.50 ரூபாய் என்ற விலையில், ரோஜாப்பூ விற்பனையாகிறது. விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓசூர் சிறு விவசாயிகள் சங்க நிர்வாகி பாலசிவப்பிரசாத், பட்டன் ரோஸ் உற்பத்தியாளர் நந்தி கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:ஓசூர் மற்றும் கேரள மார்க்கெட்டில், ரோஜாக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. செப்டம்பர் மாதம், 20ம் தேதி முதல் அக்டோபர், 18ம் தேதி வரை, ஒரு ரூபாய்க்கு விற்பனையான ரோஜா விலை,கடந்த நான்கு நாட்களாக, 2.50 ரூபாயாக உயர்ந்தது.
ஆனால், உற்பத்தி செலவு, 3.50 ரூபாயாக உள்ள நிலையில், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதனால், பல விவசாயிகள், ரோஜா சாகுபடி பரப்பை குறைத்து வருகின்றனர். விலை வீழ்ச்சியால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 5 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|