பதிவு செய்த நாள்
26 அக்2014
00:28
புதுடில்லி,: ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான உலர் பட்டுப்புழு ஏற்றுமதிக்கு, மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதன்படி, ரசாயனம் மற்றும் கூட்டுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் அனுமதி சான்றிதழ் பெற்ற பிறகே, உலர்ந்த பட்டுப் புழுக்களை, ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என, வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. உலர்ந்த பட்டுப் புழுக்கள் அதிக புரதச் சத்து நிறைந்தவையாக கருதப்படுகிறது. இது, மீன்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில், ஐரோப்பிய யூனியனின் பங்கு மிக முக்கியமானதாகும். கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், 10,150 கோடி டாலர் (6.09 லட்சம் கோடி ரூபாய்) என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|